Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

ADDED : ஜூன் 08, 2025 10:07 PM


Google News
Latest Tamil News
வால்பாறை ; சிவன் கோவில்களில் நடந்த வைகாசி மாத பிரதோஷ பூஜையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, வைகாசி மாத பிரதோஷபூஜை நடந்தது.

மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.

அதன் பின் ரிஷப வாகனத்தில் சிவபெருமான், தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷ பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வால்பாறை சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவிலில், ேஷக்கல்முடி எஸ்டேட் சிவன் கோவில்களில் நேற்று மாலை, 6:00 மணிக்கு நடந்த பிரதோஷ பூஜையில் சிவபெருமானுக்கு, 16 வகையான பொருட்களை கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us