Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தபால் ஓய்வூதியர் குறைகேட்பு; மனுக்கள் அனுப்ப அறிவுரை

தபால் ஓய்வூதியர் குறைகேட்பு; மனுக்கள் அனுப்ப அறிவுரை

தபால் ஓய்வூதியர் குறைகேட்பு; மனுக்கள் அனுப்ப அறிவுரை

தபால் ஓய்வூதியர் குறைகேட்பு; மனுக்கள் அனுப்ப அறிவுரை

ADDED : ஜூன் 23, 2025 10:59 PM


Google News
பொள்ளாச்சி; மண்டல அளவில், தபால் ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம் காணொளி வாயிலாக நடத்தப்படவுள்ளதால், ஓய்வூதியர்கள் தங்களது மனுக்களை அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் அறிக்கை:

மண்டல அளவில் தபால் ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம், வரும் ஜூலை, 2ம் தேதி காலை, 11:00 மணிக்கு, காணொளி வாயிலாக நடப்படுகிறது. இம்மாதம், 25ம் தேதி வரை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெறப்படும் மனுக்கள் பரீசிலிக்கப்படும்.

கூட்டத்தில், ஆலோசிப்பதற்கான குறைகள் மற்றும் ஆலோசனைகளை, 'தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், பொள்ளாச்சி கோட்டம், பொள்ளாச்சி - 602001' என்ற முகவரிக்கு, தபாலில் அனுப்ப வேண்டும். அல்லது dopollachi.tn@indiapost.gov.in என்ற இ----மெயிலில் அனுப்பலாம்.

தபாலின் உறை மீதும், இ--மெயில் பொருளிலும் 'மண்டல பென்ஷன் அதாலத்' என்று குறிப்பிட வேண்டும். கோட்ட அலுவலகத்தால் தீர்க்கப்படாத குறைகளை மட்டும் பெறப்பட்ட பதிலுடன் இக்குறைகேட்பு கூட்டத்திற்கு அனுப்ப வேண்டும். வாரிசுதாரர் போன்ற சட்ட ரீதியான குறைகள், அதாலத்தில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us