/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தபால் ஓய்வூதியர் குறைகேட்பு; மனுக்கள் அனுப்ப அறிவுரை தபால் ஓய்வூதியர் குறைகேட்பு; மனுக்கள் அனுப்ப அறிவுரை
தபால் ஓய்வூதியர் குறைகேட்பு; மனுக்கள் அனுப்ப அறிவுரை
தபால் ஓய்வூதியர் குறைகேட்பு; மனுக்கள் அனுப்ப அறிவுரை
தபால் ஓய்வூதியர் குறைகேட்பு; மனுக்கள் அனுப்ப அறிவுரை
ADDED : ஜூன் 23, 2025 10:59 PM
பொள்ளாச்சி; மண்டல அளவில், தபால் ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம் காணொளி வாயிலாக நடத்தப்படவுள்ளதால், ஓய்வூதியர்கள் தங்களது மனுக்களை அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் அறிக்கை:
மண்டல அளவில் தபால் ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம், வரும் ஜூலை, 2ம் தேதி காலை, 11:00 மணிக்கு, காணொளி வாயிலாக நடப்படுகிறது. இம்மாதம், 25ம் தேதி வரை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெறப்படும் மனுக்கள் பரீசிலிக்கப்படும்.
கூட்டத்தில், ஆலோசிப்பதற்கான குறைகள் மற்றும் ஆலோசனைகளை, 'தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், பொள்ளாச்சி கோட்டம், பொள்ளாச்சி - 602001' என்ற முகவரிக்கு, தபாலில் அனுப்ப வேண்டும். அல்லது dopollachi.tn@indiapost.gov.in என்ற இ----மெயிலில் அனுப்பலாம்.
தபாலின் உறை மீதும், இ--மெயில் பொருளிலும் 'மண்டல பென்ஷன் அதாலத்' என்று குறிப்பிட வேண்டும். கோட்ட அலுவலகத்தால் தீர்க்கப்படாத குறைகளை மட்டும் பெறப்பட்ட பதிலுடன் இக்குறைகேட்பு கூட்டத்திற்கு அனுப்ப வேண்டும். வாரிசுதாரர் போன்ற சட்ட ரீதியான குறைகள், அதாலத்தில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.