/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்

ஆனைமலை
ஆனைமலை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் உள்ளடங்கிய கல்வி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் எடிசன் பெர்னாட், வட்டார கல்வி பணியாளர்கள், உள்ளடங்கிய கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் விசாலாட்சி, சிறப்பு பயிற்றுநர்கள், மைய ஆசிரியர் அமுதா, உதவியாளர் சரண்யா, மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடந்தது. பள்ளி ஆசிரியர்களுக்கு, மியூசிக் சேர், உறியடி, லெமன் அண்ட் ஸ்பூன் மற்றும் பலுான் உடைத்தல் போன்ற போட்டிகள் நடந்தது.
வால்பாறை
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த பொங்கல் விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். கல்லுாரி மாணவ, மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்தனர். மாணவர்கள் நடனமாடி அசத்தினர். பாடப்பிரிவு வாரியாக மாணவர்கள் தனித்தனியாக பொங்கல் வைத்தனர். * வால்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். மாணவ, மாணவியர் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை
இன்று முதல் பொங்கல் விடுமுறை துவங்குவதையொட்டி, உடுமலை பள்ளி, கல்லுாரிகளில் நேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர். அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து பொங்கல் வைத்தனர். கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.