Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாக்காளர் பட்டியலில் இறந்தோர் பெயர் நீக்கக் கோரும் அரசியல் கட்சியினர்

வாக்காளர் பட்டியலில் இறந்தோர் பெயர் நீக்கக் கோரும் அரசியல் கட்சியினர்

வாக்காளர் பட்டியலில் இறந்தோர் பெயர் நீக்கக் கோரும் அரசியல் கட்சியினர்

வாக்காளர் பட்டியலில் இறந்தோர் பெயர் நீக்கக் கோரும் அரசியல் கட்சியினர்

ADDED : மார் 19, 2025 08:36 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில், இறந்த நபர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என, அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், 2026ம் சட்டசபை தேர்தலின்போது, மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து, அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் தி.மு.க., -- அ.தி.மு.க., -- காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கருத்து கேட்டறியப்பட்டது.

அப்போது, அரசியில் கட்சியினர் கூறியதாவது:

பொள்ளாச்சி சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில், இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும். குறிப்பாக, ரயில்வே காலனியில் வசித்தவர்களில், பெரும்பாலானவர்கள் வேறு இடத்திற்கு மாறி விட்டனர். அவர்களில் பலரது பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனை முறைபடுத்த வேண்டும்.

பூத் முகவர்கள், முறையாக பணிபுரிய வேண்டும். வார்டு வரையறையை சரி பார்க்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகள் சற்று தொலைவில் இருக்கும். எனவே, தேர்தலின் போது, கிராமங்களுக்கு சிறப்பு பஸ் இயக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவி மேற்கொள்ள வேண்டும். ஒரு வார்டுக்கு ஒரு பூத் மட்டுமே இருக்க வேண்டும். கூடுதல் பூத் இருந்தால் அதனையும் வரைமுறைபடுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பதில் அளித்த தேர்தல் அலுவலர்கள், 'கோரிக்கைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியான தேர்தலுக்கு அரசியில் கட்சியினர் ஒத்துழைப்பு அவசியம்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us