/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மரப்பேட்டை நூலக கட்டடம் கட்டும் பணியில் அரசியல் தலையீடு! கலெக்டர் உத்தரவிட்டும் இடத்தை பறிக்க முயற்சிமரப்பேட்டை நூலக கட்டடம் கட்டும் பணியில் அரசியல் தலையீடு! கலெக்டர் உத்தரவிட்டும் இடத்தை பறிக்க முயற்சி
மரப்பேட்டை நூலக கட்டடம் கட்டும் பணியில் அரசியல் தலையீடு! கலெக்டர் உத்தரவிட்டும் இடத்தை பறிக்க முயற்சி
மரப்பேட்டை நூலக கட்டடம் கட்டும் பணியில் அரசியல் தலையீடு! கலெக்டர் உத்தரவிட்டும் இடத்தை பறிக்க முயற்சி
மரப்பேட்டை நூலக கட்டடம் கட்டும் பணியில் அரசியல் தலையீடு! கலெக்டர் உத்தரவிட்டும் இடத்தை பறிக்க முயற்சி

பின்னணி என்ன?
நகராட்சி கந்தசாமி பூங்கா அருகே, கடந்த, 1954ல் அப்போதைய நகராட்சி தலைவர் நாச்சிமுத்து தலைமையில் நடந்த நகராட்சி சிறப்பு கூட்டத்தில், கட்டடத்தையும், தளவாட பொருட்களையும் நுாலகத்துறை பராமரிப்பு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வழங்கப்பட்டதாக தெரிகிறது. அந்த கட்டடம் தற்போது, நுாலகத்துறை பராமரிப்பில் உள்ளது.
ஏனிந்த இடையூறு!
வாசகர்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி அருகே உள்ள பகுதிகளில் எல்லாம், நுாலகங்கள் தரம் உயர்வு, டிஜிட்டல் மயமாக மாற்றுதல் என அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்கின்றன. அதே நேரத்தில், பொள்ளாச்சியில் உள்ள ஒரு நுாலகத்துக்கு கட்டடம் கட்டுவதற்கே போராட வேண்டிய நிலை உள்ளது.
ஆட்சேபனை இல்லை
நகராட்சி அதிகாரிகள், 'நுாலக கட்டடம் உள்ள இடம் நகராட்சி வசம் உள்ளது. எனினும், ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி வழங்கியுள்ளதுடன், மாவட்ட கலெக்டர் கடிதமும் உள்ளதால், ஆட்சேபனை தெரிவிக்க முடியாது. இதற்கு மேல் என்ன காரணத்தால் கட்டடம் கட்டப்படாமல் உள்ளது என தெரியவில்லை,' என்றனர்.
வாசகர்கள் எதிர்பார்ப்பு
நுாலகத்துறைக்கு அந்த இடத்தில் கட்டடம் கட்ட கடந்த, 2019ம் ஆண்டு மாவட்ட கலெக்டர் அனுமதி கொடுத்தார். அந்த கடிதத்துடன் தற்போது மாவட்ட நிர்வாக அனுமதி பெற்று கட்டுமானப்பணிகளை துவங்க நுாலகத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகளில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.