Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரசாயன நிறுவனங்களில் மதுவிலக்கு போலீஸ் ஆய்வு

ரசாயன நிறுவனங்களில் மதுவிலக்கு போலீஸ் ஆய்வு

ரசாயன நிறுவனங்களில் மதுவிலக்கு போலீஸ் ஆய்வு

ரசாயன நிறுவனங்களில் மதுவிலக்கு போலீஸ் ஆய்வு

ADDED : ஜூன் 07, 2025 09:21 AM


Google News
கோவை; கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவினர், இன்ஸ்பெக்டர் சரவணன், மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் தலைமையில் நேற்று மாநகர பகுதிகளில் இயங்கும் கெமிக்கல் மற்றும் உயிருக்கு ஆபத்தான ரசாயனங்களை கையாளும் பொன்மணி அண்ட் கோ, மகாலட்சுமி சயின்டிபிக் தொழிற்சாலை, பிரியதர்ஷினி கெமிக்கல்ஸ், பிரசாத் அண்ட் கோ ஆகியவற்றில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள ரசாயனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. மேலும் அவை எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் விசாரித்தனர்.

தொடர்ந்து ரசாயனங்களை வாங்குவோர் விபரங்களை முறையாக பராமரிக்கவேண்டும். விற்பனை செய்தல், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் செயல்களில் ஈடுபடுதல் போன்றவைகளை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us