/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அதிகாரிகளை அதிர வைத்த மனுக்கள் நில அளவைத் துறை மீது சரமாரி புகார் அதிகாரிகளை அதிர வைத்த மனுக்கள் நில அளவைத் துறை மீது சரமாரி புகார்
அதிகாரிகளை அதிர வைத்த மனுக்கள் நில அளவைத் துறை மீது சரமாரி புகார்
அதிகாரிகளை அதிர வைத்த மனுக்கள் நில அளவைத் துறை மீது சரமாரி புகார்
அதிகாரிகளை அதிர வைத்த மனுக்கள் நில அளவைத் துறை மீது சரமாரி புகார்

பிறப்பு - இறப்பு தவிப்பு
கஞ்சப்பள்ளி மக்கள் அளித்த மனுவில், 'நத்தம் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். தாசபாளையத்தில் வாடகை கட்டடத்தில் செயல்படும் ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும்' என்றனர். ஆம்போதி மக்கள் அளித்த மனுவில்,' தாலுகா அலுவலகத்தில் 2008ம் ஆண்டுக்கான பிறப்பு இறப்பு பதிவேடு இல்லை. இதனால், பிறப்பு -- இறப்பு பதிவு செய்ய முடியாமல் தவிக்கிறோம்,' என்றனர்.ஊத்துப்பாளையம் விவசாயி அளித்த மனுவில், 'சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என ஆர்.டி.ஓ.,விடம் தெரிவித்தார். மனு அளித்தவர்களில் பலர் 'நிலம் அளக்க விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் அளக்கவில்லை. உட்பிரிவு செய்வதில் தாமதம் செய்கின்றனர்,' என புகார் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தாசில்தார்கள், வேளாண் துறை, தோட்டக்கலை துறை, பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.