Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விளாங்குறிச்சியில் குப்பை தரம் பிரிப்பு; நிறுத்த கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

விளாங்குறிச்சியில் குப்பை தரம் பிரிப்பு; நிறுத்த கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

விளாங்குறிச்சியில் குப்பை தரம் பிரிப்பு; நிறுத்த கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

விளாங்குறிச்சியில் குப்பை தரம் பிரிப்பு; நிறுத்த கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

ADDED : மார் 25, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
கோவை; பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள, மயானத்தில் செயல்படும் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கான விஸ்தரிப்பு பணிகளை நிறுத்துமாறு, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பீளமேடு, விளாங்குறிச்சி சாலையில், ஏழு ஏக்கரில் அமைந்துள்ளஇந்து மயானத்தில் மூன்றுஏக்கருக்கு, குப்பை தரம் பிரிக்கும் மையம் செயல்படுகிறது.மீதமுள்ள நான்கு ஏக்கரில் இரண்டில்,மின் மயானம் செயல்படுகிறது.

மயானமாக உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில்,குப்பை தரம் பிரிக்கும் மையத்தை விரிவாக்கம் செய்ய கட்டுமான பணிநடக்கிறது. இதனால் பீளமேடு சுற்றுவட்டார மக்கள்,மயானத்தை பயன்படுத்த முடியாதசூழல் ஏற்பட்டுள்ளது.

இங்கு கொட்டப்படும் குப்பைகளாலும், மின் மயானத்திலிருந்து வரும் துர்நாற்றத்தாலும் மக்கள் கடுமையாகபாதிக்கப்படுகின்றனர். ஆகவே, இங்கு குப்பை தரம் பிரிக்கும் பணிகளை நிறுத்த, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

* காரமடையிலுள்ள தனியார்நிறுவனத்தில், 800 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.கடந்த ஆண்டு இந்நிறுவனம் மூடப்பட்டது. ஆலையை மீண்டும் திறக்க வேண்டும், சம்பளம், இழப்பீடு, நிவாரணம் வழங்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us