Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அபாயம்

சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அபாயம்

சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அபாயம்

சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அபாயம்

ADDED : மே 26, 2025 04:44 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள பிரதான வழித்தடங்களில், சாலையோரத்தில் ஆங்காங்கே கனரக வாகனங்கள் நிறுத்தி வைத்திருப்பதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

வளர்ந்து வரும் நகரமான பொள்ளாச்சியில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மேலும், நகரில் இருந்து செல்லும் பிரதான வழித்தடங்களில், போக்குவரத்து அதிகம் உள்ளது.

அதேநேரம், கனரக வாகன ஓட்டுநர்கள் சிலர், சாலையோரம் இரு புறத்திலும், வாகனங்களை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்க முற்படுகின்றனர்.

குறிப்பாக, வாகனங்களை நிறுத்தி, உணவு சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அவ்வழித்தடத்தில், அதிவேகமாக செல்லும் வாகனங்கள், விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'சாலையோரம் நிறுத்தி வைக்கப்படும் கனரக வாகனங்களின் மீது, பிற வாகனங்கள் மோதி, விபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, பாலக்காடு ரோடு, வால்பாறை வழித்தடத்தில், கனரக வாகனங்கள் பகல் நேரத்திலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார், நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us