/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரூ.1.29 கோடியில் தார் சாலை விரைந்து முடிக்க உத்தரவு ரூ.1.29 கோடியில் தார் சாலை விரைந்து முடிக்க உத்தரவு
ரூ.1.29 கோடியில் தார் சாலை விரைந்து முடிக்க உத்தரவு
ரூ.1.29 கோடியில் தார் சாலை விரைந்து முடிக்க உத்தரவு
ரூ.1.29 கோடியில் தார் சாலை விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : ஜூன் 09, 2025 11:05 PM
கோவை; மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ரோடு உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, வடக்கு மண்டலத்துக்குட்பட்ட துடியலுார், ஸ்ரீகாந்த் நகர், வளர்மதி நகர் உள்ளிட்ட, 10 இடங்களில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
சரவணம்பட்டி, போஸ் கார்டன் பகுதியில் புதிதாக தார் சாலை அமையவுள்ள இடத்தையும், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.