ADDED : பிப் 09, 2024 11:22 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு அருகே உள்ள காணியாலம்பாளையம் பகுதியில், ரோட்டை கடந்தவர் விபத்தில் காயம் அடைந்தார்.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு காணியாலம்பாளையம் அருகே செட்டியக்காபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி,50.ரோட்டை கடந்து சென்றார்.
அப்போது, ரோட்டில் கவியரசு என்பவர் ஓட்டி வந்த கார், கிருஷ்ணமூர்த்தி மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.