Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பைபாஸ் ரோட்டில் ஆம்னி பஸ்கள் நிறுத்தம்

பைபாஸ் ரோட்டில் ஆம்னி பஸ்கள் நிறுத்தம்

பைபாஸ் ரோட்டில் ஆம்னி பஸ்கள் நிறுத்தம்

பைபாஸ் ரோட்டில் ஆம்னி பஸ்கள் நிறுத்தம்

ADDED : மே 17, 2025 05:04 AM


Google News
உடுமலை : பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில், நெரிசல் மிகுந்த பகுதியில், 'ஆம்னி' பஸ்களை நிறுத்தும் பிரச்னை குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, பஸ் ஸ்டாண்ட் வழியாக பழநி ரோட்டில், இணையும் பை-பாஸ் ரோடு குறுகலாக உள்ளது.

இந்த ரோட்டில், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் உட்பட வழித்தட பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் நுழையும் நுழைவாயில் பகுதி அமைந்துள்ளது.

இந்நிலையில், உடுமலையில் இருந்து சென்னை உட்பட தொலைதுார பகுதிகளுக்கு, 25க்கும் அதிகமான 'ஆம்னி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும், இரவு 8:00 மணிக்கு மேல், பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலை ஒட்டி, பை-பாஸ் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.

பயணியர் ஏறும் வரை வரிசையாக, நிறுத்தப்படும் 'ஆம்னி' பஸ்களால், அவ்வழியாக பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இரவு நேரங்களில், பை-பாஸ் ரோட்டில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகி விட்டது.

இப்பிரச்னைக்கான தீர்வு குறித்து, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார், ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us