
சிறு அறையில் பலர்
பாக்கு உற்பத்தி செய்யும் பணிக்காக, 20 ஆண்டுகளுக்கு முன்பு, அசாம் மாநிலத்தில் இருந்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் இங்கு அழைத்து வரப்பட்டு, பணியில் அமர்த்தப்பட்டனர். பாக்கு உற்பத்தி செய்யும் இடத்திலேயே, சிமென்ட் ஷீட் கொண்டு உருவாக்கப்பட்ட சுமார், 6 அடி அகலம், 10 அடி நீளம் கொண்ட அறைகளில், தங்க வைக்கப்பட்டனர்.
தகவல்கள் இல்லை
தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கும், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தருவதில்லை. ஆனால், பணப்பலன் மட்டும் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஷெட்களிலும் எத்தனை பேர் தங்கியுள்ளனர், யார், யார் தங்கியுள்ளனர் என்ற விபரங்கள், பேரூராட்சி நிர்வாகங்களிடமும், போலீசாரிடமும் இல்லை.
வரி விதிக்க வேண்டும்
இதுபோல், வரி செலுத்தாமல், உரிமையாளர்கள் மட்டும் பலன் பெறும் வகையில் செயல்படுவதால், ஆயிரக்கணக்கில் உள்ள வடமாநில தொழிலாளர்களின் குடிநீர் தேவையை, பேரூராட்சிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளன.