Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மக்களிடம் ரசனை இருக்கும் வரை எந்த கலையும் அழியாது

மக்களிடம் ரசனை இருக்கும் வரை எந்த கலையும் அழியாது

மக்களிடம் ரசனை இருக்கும் வரை எந்த கலையும் அழியாது

மக்களிடம் ரசனை இருக்கும் வரை எந்த கலையும் அழியாது

ADDED : ஜூன் 29, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
''மக்களிடம் ரசனை இருக்கும் வரை, எந்த கலையும் அழியாது,'' என்கிறார் மூத்த நாடக கலைஞர் மணி.

அவருடன் ஒரு சந்திப்பு...

நான் முதலில் கவிஞர் கணியூரான் நாடக குழுவில் சேர்ந்து நடித்து வந்தேன். பிறகு கோவை அனுராதா நாடக குழுவில், சில வருடங்கள் நடித்தேன்.அப்போது கோவையில் கலை மாமணி கே.ஆர்.எஸ். கிருஷ்ணனின், கே.ஆர்.எஸ்., நாடகக்குழு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருந்தது.

அந்த குழுவில் இணைந்து, கடந்த 45 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை 2300 மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறேன்.

சொந்தமாக, 'கோவை சேம்பர் ஆப் ஆர்ட்ஸ்' என்ற கலைக்குழுவை, 1970-ல் தொடங்கி இப்போதும் நடத்தி வருகிறேன்.

''உங்கள் நாடகங்களில், சிறப்பான நாடகம் என்றால் எதை சொல்வீர்கள்?''

நாங்கள் மேடை ஏற்றிய நாடகங்களில் சிறப்பானது என்றால், எழுத்தாளர் விமலா ரமணி எழுதிய, 'பாரின் ரிட்டர்ன் பரசுராமன்' நாடகம்தான். இந்த நாடகம், தமிழகத்தின் பல இடங்களில் ரசிகர்களின் பாராட்டுதலை பெற்றது.

''நாடகக்கலை அழிந்து வருவதாக கூறப்படுவது குறித்து?''

நாடக கலை இன்று பல்வேறு வடிவ மாற்றங்களை பெற்றுள்ளன. அன்றைக்கு கூத்து கலை மேடை நாடகமாக உருவானது. மேடை நாடகத்தில் இருந்து சினிமா உருவானது.

இன்றைக்கு பல கலை வடிவங்களாக மாறி இருக்கிறது. நிகழ்த்து கலைகள் அனைத்துக்கும், மேடை நாடகங்கள்தான் அடிப்படை. மக்களிடம் ரசனை இருக்கும் வரை, எந்த கலையும் அழியாது.

மேடை நாடகம்

கோவையில் கடந்த, 58 வருடங்களாக கலை துறையில் நாடகம், இசை மற்றும் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடத்தி வருபவர் நாடக கலைஞர் மணி. அத்தோடு, அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று, கலைஞர்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார்.பல நாடகங்களை எழுதி, இயக்கி இருக்கிறார். ஊடகங்களின் அதிநவீன வளர்ச்சியால், மேடை நாடகக்கலை இன்றைக்கு நலிவடைந்து வரும் சூழலில், மீண்டும் மேடை நாடகங்களை மக்கள் மத்தியில் நிகழ்த்தி காட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.இவரது கலைச்சேவையை பாராட்டி, கோவை மாருதி கான சபா, சமீபத்தில் விருது வழங்கி கவுரவித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us