/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிராமப்புறங்களில் பாம்புக்கடி சிகிச்சைக்கு தனி வார்டு வேண்டும்! கோவை கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை!கிராமப்புறங்களில் பாம்புக்கடி சிகிச்சைக்கு தனி வார்டு வேண்டும்! கோவை கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை!
கிராமப்புறங்களில் பாம்புக்கடி சிகிச்சைக்கு தனி வார்டு வேண்டும்! கோவை கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை!
கிராமப்புறங்களில் பாம்புக்கடி சிகிச்சைக்கு தனி வார்டு வேண்டும்! கோவை கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை!
கிராமப்புறங்களில் பாம்புக்கடி சிகிச்சைக்கு தனி வார்டு வேண்டும்! கோவை கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை!

பட்டாவுக்கு எண்
தேவராயபுரம் ஊராட்சி தலைவர் சுந்தரி கொடுத்த மனுவில், 'தேவராயபுரம் கிராமத்தில், 100 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. பலமுறை முறையிட்டும் இன்னும் க.ச. எண் மற்றும் காலை எண் குறிப்பிட்டுத் தரவில்லை. அதனால், அந்த பட்டாக்களை வைத்து வீடு கட்ட முடியவில்லை; வீட்டுக்கடன் பெற முடியவில்லை. உடனடியாக, க.ச., எண் மற்றும் காலை எண் போட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.
மகள் இறப்பில் மர்மம்
தீத்திபாளையத்தை சேர்ந்த ஒருவர் கொடுத்த மனுவில், 'டிராக்டர் டிரைவராக பணிபுரிகிறேன். எனது இளைய மகள், காளம்பாளையத்தில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்தாள். கடந்த, 1ம் தேதி வேலைக்குச் சென்றவள் வீடு திரும்பவில்லை. செல்லப்ப கவுண்டனுார் ஊர் கவுண்டர் தோட்டத்துக்கு அருகே, எனது மகள் படுகாயத்துடன் கிடந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். எனது மகள் கடத்தப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகம் இருக்கிறது. உரிய விசாரணை நடத்த வேண்டும்' என கூறியுள்ளார்.
மூதாட்டி மயக்கம்!
கோவை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட ராமராஜபுரம் வெள்ளியங்கிரி மனைவி பழனியம்மாள்,81, கணவர் இல்லாத நிலையில், முதியோர் உதவித் தொகை கேட்டு, கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார். பொதுமக்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உதவியுடன், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாம்புக்கடி சிகிச்சைக்கு தனி வார்டு
ஒரு தாய் மக்கள் கட்சி மக்கள் எழுச்சி பேரவை பொது செயலாளர் ராஜ்கிருஷ்ணா கொடுத்த மனுவில், 'கோவை மாவட்டத்தில் தினமும் ஏதேனும் ஒரு பகுதியில் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு பலர் வருகின்றனர். சிகிச்சையில் பிழைத்தோர் சிலர்; சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் பலர்.


