Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரூ. 5 லட்சம் வரை பொருளீட்டு கடன்

ரூ. 5 லட்சம் வரை பொருளீட்டு கடன்

ரூ. 5 லட்சம் வரை பொருளீட்டு கடன்

ரூ. 5 லட்சம் வரை பொருளீட்டு கடன்

ADDED : ஜூன் 13, 2025 10:04 PM


Google News
சூலுார்; சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வாணி அறிக்கை: சூலுாரில், திருச்சி மெயின் ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. இங்கு, சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, கொப்பரை உள்ளிட்ட விளை பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளும் கிடங்குகள் வசதி உள்ளது.

கிடங்கில் சேமித்து வைக்கப்படும் விளை பொருட்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை, பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. இதனை, சூலுார் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை இ - நாம் திட்டத்தின் வாயிலாக, விற்று உரிய விலையை பெற்று பயனடைய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு, ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளரை 99769 63449 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us