Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போலி ஆவணங்கள் வாயிலாக வீட்டு மனை மோசடி செய்தவருக்கு சிறை

போலி ஆவணங்கள் வாயிலாக வீட்டு மனை மோசடி செய்தவருக்கு சிறை

போலி ஆவணங்கள் வாயிலாக வீட்டு மனை மோசடி செய்தவருக்கு சிறை

போலி ஆவணங்கள் வாயிலாக வீட்டு மனை மோசடி செய்தவருக்கு சிறை

ADDED : ஜூன் 16, 2025 12:43 AM


Google News
கோவை; போலி ஆவணங்கள் வாயிலாக ரூ.60 லட்சம் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த வழக்கில் மூன்று ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை சுந்தராபுரம் சாரதா மில் ரோட்டை சேர்ந்தவர் மரகதம், 73. கோவை கிணத்துக்கடவு, அரிசிபாளையத்தில் 1800 சதுர அடி வீட்டுமனையை, 1998ம் ஆண்டு கிரையம் செய்தார்.

சிறிது ஆண்டுகளுக்கு பின், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவ்வீட்டுமனையை விற்க முயன்றார்.

அப்போது சொத்து குறித்த வில்லங்க சான்றிதழ் எடுத்து பார்த்த போது, அவ்வீட்டுமனை வேறு ஒருவருக்கு கிரையம் செய்யப்பட்டிருந்தது.

விசாரணையில், கோவை ஈச்சனாரி, கணேசபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு, மரகதம், அவரது கணவர் சண்முகம் சேர்ந்து, பொது அதிகாரம் கொடுத்தது போல் போலி ஆவணம் தயாரித்து, மரகதம், சண்முகம் போலி ஆதார்கார்டு தயாரித்து, பலர் வாயிலாக விற்பனை செய்தது தெரிந்தது.

மரகதம் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், 2022 ல் வழக்கு பதிந்து விசாரித்தனர். கார்த்திகேயன் உட்பட, ஒன்பது பேருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.

வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய மூவர் உயிரிழந்தனர். முக்கிய குற்றவாளியான துாத்துக்குடி மாவட்டம் கருங்கல்குளத்தை சேர்ந்த டேனியல், 57 என்பவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், டேனியல், திருப்பூர் மாவட்டம், கே.செட்டிபாளையத்தில் இருப்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us