Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும், 3ல் மஹா கும்பாபிேஷம்

ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும், 3ல் மஹா கும்பாபிேஷம்

ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும், 3ல் மஹா கும்பாபிேஷம்

ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும், 3ல் மஹா கும்பாபிேஷம்

ADDED : அக் 22, 2025 11:02 PM


Google News
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டி ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில் மஹா கும்பாபி ேஷக விழா வரும், 3ம் தேதி நடக்கிறது.

பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டி ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவிலில், மஹா கும்பாபிேஷக விழா வரும், 31ம் தேதி மாலை, 5:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, யாகசாலை பிரவேசம், சாந்தி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்குகிறது.

வரும், நவ. 1ம் தேதி காலை, 8:00 மணிக்கு முதல் கால யாக பூஜை, யாக சாலை பிரவேசம், அங்குரார்பணம் உள்ளிட்ட பூஜைகளும், மாலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் நடக்கிறது. 2ம் தேதி காலை, 8:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, மாலை, 3:00 மணிக்கு அபிேஷகம், விமானங்களுக்கு சிறப்பு பூஜை, மாலை, 4:15 மணிக்கு நான்காம் வேள்வி பூஜை நடக்கிறது.

வரும், 3ம் தேதி காலை, 6:00 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜையும், காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை யாத்ரா தானம், கடம், கலசங்கள் புறப்படுத்தல், மூன்று விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.

அதன்பின், காலை, 10:00 மணிக்கு மஹா நிவேதனம், பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு பஜனை பாடல்கள், மாலை, 5:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

இதற்கான ஏற்பாட்டினை, ஜெய் அனுமான் சேரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us