Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குண்டத்து காளியா தேவி கோவில் குண்டம் விழா

குண்டத்து காளியா தேவி கோவில் குண்டம் விழா

குண்டத்து காளியா தேவி கோவில் குண்டம் விழா

குண்டத்து காளியா தேவி கோவில் குண்டம் விழா

ADDED : மார் 25, 2025 10:01 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்; குண்டத்து காளியா தேவி கோவில், குண்டம் திருவிழா பூச்சாட்டுடன் துவங்கியது.

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் , 37ம் ஆண்டு குண்டம் திருவிழா, நேற்று இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. அம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜை செய்து பூச்சாட்டினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஏப்ரல் 7ம் தேதி அம்மன் அழைப்பும், 8ம் தேதி ஊமப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி கரகங்களும், அக்னி சட்டியும் அழைத்து வந்து, இரவு குண்டம் திறக்கப்பட உள்ளது. ஒன்பதாம் தேதி காலை பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், அதைத் தொடர்ந்து குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. பின்பு அம்மனுக்கும் முனீஸ்வரருக்கும் அக்னி அபிஷேகம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராட்டு, 11ம் தேதி மகா அபிஷேக மறு பூஜை நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us