Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ADDED : ஜூலை 02, 2025 10:00 PM


Google News
Latest Tamil News
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ரங்கநாதபுரத்தில் உள்ள கற்பக விநாயகர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இக்கோவிலின் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்ததையொட்டி கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை காலை, 7:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது.

தொடர்ந்து, தனஸ்ரீ லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை, கோபுர கலச ஸ்தாபனம் நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை, 5:00 மணி அளவில் முதல் கால யாக பூஜையில், வாஸ்து சாந்தி ஹோமம், 108 மூலிகைகளுடன் காயத்ரி ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று காலை, 4:00 மணி அளவில் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. தீபாராதனை, கலச புறப்பாடுகள் நடைபெற்றன. காலை , 6:00 மணிக்கு கோபுர விமான கலசம் மற்றும் மூலவர் கற்பக விநாயக மூர்த்திக்கு சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து, மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அன்னதானம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us