
மக்கள் அவதியோ அவதி
இதே வளாகத்தில், பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், தெருநாய் கருத்தடை சிகிச்சை மையம் கட்டப்பட்டு உள்ளன. குப்பையால், நிலத்தடி நீர் மாசடைந்து, மஞ்சள் நிறத்தில் வருகிறது; காற்று மாசு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதால் சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி வருகின்றனர்.
கருத்து கேட்பு கூட்டம்
இதையடுத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. காய்கறி, பழக்கடை வியாபாரிகள் மற்றும் லாரிப்பேட்டையை கொண்டு செல்வதற்கு, வியாபாரிகள் ஒப்புதல் அளிக்கவில்லை. கோயம்புத்துார் மோட்டார் டிரான்ஸ்போர்ட் கவுன்சில் என்கிற சங்கத்தினரிடம் இருந்து, பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதையும் கேட்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் கடிதம் பெற்றிருக்கின்றனர்.
எதிர்ப்பு கட்டாயம் வரும்
மாமன்ற கூட்டத்தில் தீர்மானமாக கொண்டு வந்தால், கவுன்சிலர்களிடம் எதிர்ப்பு வரும் என்பதால், மேயரிடம் முன்அனுமதி பெற்று, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 28ல் நடைபெறும் மாமன்ற கூட்டத்தில், பின்னேற்பு கேட்டு, தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.