Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையத்தில் இன்று ஜமாபந்தி துவக்கம்

மேட்டுப்பாளையத்தில் இன்று ஜமாபந்தி துவக்கம்

மேட்டுப்பாளையத்தில் இன்று ஜமாபந்தி துவக்கம்

மேட்டுப்பாளையத்தில் இன்று ஜமாபந்தி துவக்கம்

ADDED : மே 19, 2025 11:13 PM


Google News
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தாலுகாவில் இன்று முதல், நான்கு நாட்களுக்கு தொடர்ந்து ஜமாபந்தி நடைபெற உள்ளது.

மேட்டுப்பாளையம் தாலுகாவில், 19 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஆண்டு தோறும் வருவாய் துறை சார்பில், கிராமங்களின் வரவு செலவு கணக்குகளை சரி பார்ப்பது, தணிக்கை செய்வது, பொதுமக்களிடம் மனுக்களை பெறுவது, அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பது என ஜமாபந்தியில் நடைபெறுவது வழக்கம்.

மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகத்தில், இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி இன்று காலை, 10:00 மணிக்கு துவங்க உள்ளது. கெம்மாரம்பாளையம், தோளம்பாளையம், வெள்ளியங்காடு, காளம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு, இன்று ஜமாபந்தி நடைபெற உள்ளது. 21ம் தேதி காரமடை, மருதூர், பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும், 22ம் தேதி நெல்லித்துறை, ஓடந்துறை, தேக்கம்பட்டி, சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம், சிறுமுகை ஆகிய ஊராட்சிகளுக்கு ஜமாபந்தி நடைபெற உள்ளது.

23ம் தேதி இரும்பறை, இலுப்பநத்தம், சின்னக்கள்ளிப்பட்டி, முடுதுறை, பெள்ளேபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு ஜமாபந்தி நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மற்றும் சிறுபான்மை அலுவலர், ஜமாபந்தி அலுவலராக பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். எனவே அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், கோரிக்கை மனுவை ஜமாபந்தி அலுவலரிடம் கொடுத்து, தீர்வு பெரும்படி வருவாய்த்துறை துறையினர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us