Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முதலீட்டு பணத்துக்கு அதிக லாபம் தருவதாக ஐ.டி., ஊழியரிடம் மோசடி 

முதலீட்டு பணத்துக்கு அதிக லாபம் தருவதாக ஐ.டி., ஊழியரிடம் மோசடி 

முதலீட்டு பணத்துக்கு அதிக லாபம் தருவதாக ஐ.டி., ஊழியரிடம் மோசடி 

முதலீட்டு பணத்துக்கு அதிக லாபம் தருவதாக ஐ.டி., ஊழியரிடம் மோசடி 

ADDED : மே 15, 2025 03:25 AM


Google News
கோவை:கோவை, கணபதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன், 36; சென்னையில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில், 'டீம் லீடர்'.

இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கடந்த, ஏப்., மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பெங்களூருவில் செயல்பட்டு வரும், 'பிலிப் சைடு குளோபல் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் இருந்து அழைப்பதாகவும், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், நல்ல லாபம் ஈட்டி தருவதாகவும் கூறினார்.

இதை நம்பிய புவனேஸ்வரன், மோசடி நபர் அளித்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, 16 தவணைகளாக ரூ. 21.17 லட்சம் அனுப்பினார். இதன் பின், லாப பணத்தை கேட்டபோது, அந்த நபர், புவனேஸ்வரனை தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டார். புவனேஸ்வரன் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த புவனேஸ்வரன், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us