Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சமூக நலத்துறை முகாம் பயன்பெற அழைப்பு

சமூக நலத்துறை முகாம் பயன்பெற அழைப்பு

சமூக நலத்துறை முகாம் பயன்பெற அழைப்பு

சமூக நலத்துறை முகாம் பயன்பெற அழைப்பு

ADDED : ஜூன் 04, 2025 09:02 PM


Google News
கிணத்துக்கடவு; கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் நலிவுற்ற பெண்களுக்கு சமூக நலத்துறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்கிறது.

கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் நலிவுற்ற, ஆதரவற்ற பெண்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சமூக நலத்துறை சார்பில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்ய, நேற்று துவங்கிய முகாம், 6ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்கிறது.

கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் முகாம் நடக்கிறது. முகாமில், பங்கேற்கும் பெண்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, விதவைச் சான்று அல்லது கணவனால் கைவிடப்பட்டதற்கான சான்று, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் வாயிலாக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை எளிமையாக பெறலாம்.

எனவே, கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ளவர்கள், இத்திட்டத்தில் பயன்பெற முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என, கிணத்துக்கடவு சமூக நலத்துறை விரிவு அலுவலர் சோபனா மற்றும் ஊர் நல அலுவலர் (மகளிர்) சீதாலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us