/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அக்கறை தொடர்ந்து வலியுறுத்தும் தொழில் அமைப்புகள் கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அக்கறை தொடர்ந்து வலியுறுத்தும் தொழில் அமைப்புகள்
கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அக்கறை தொடர்ந்து வலியுறுத்தும் தொழில் அமைப்புகள்
கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அக்கறை தொடர்ந்து வலியுறுத்தும் தொழில் அமைப்புகள்
கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அக்கறை தொடர்ந்து வலியுறுத்தும் தொழில் அமைப்புகள்

அரசுக்கு வலியுறுத்தல்
கோவை வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தை, தொழில் வர்த்தக சபை, சைமா, கொடிசியா, சி.ஐ.ஐ., உட்பட பல்வேறு தொழில் அமைப்புகளும், மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
கொடிசியா கடிதம்
சமீபத்தில், கொடிசியா சார்பில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், 'கோவை நகரை 6 தேசிய நெடுஞ்சாலைகள் கடக்கும் நிலையில், சாலை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். கிழக்கு புறவழிச்சாலை, மேற்கு புறவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 544ல், 95 கி.மீ., தூரத்தை ஆறு வழிப் பாதையாக மாற்ற வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.
மக்கள் பிரதிநிதிகளுக்கும் பங்கு
இவ்வாறு, கோவையின் வளர்ச்சியில் தொழில் அமைப்புகள் அக்கறை காட்டி, தொடர்ந்து மத்திய மாநில அரசுகளிடம் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து வலியுறுத்தி வருகின்றன.