Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நுால் தேவை அதிகரிப்பு; பட்டுக்கூடு விலை உயர்வு

நுால் தேவை அதிகரிப்பு; பட்டுக்கூடு விலை உயர்வு

நுால் தேவை அதிகரிப்பு; பட்டுக்கூடு விலை உயர்வு

நுால் தேவை அதிகரிப்பு; பட்டுக்கூடு விலை உயர்வு

ADDED : செப் 08, 2025 10:59 PM


Google News
கோவை; கோவை, பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, உடுமலை, திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வருகின்றனர். மாதம் 25 டன்னுக்கு மேல் பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தினமும் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் வருகின்றனர்.

அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், பட்டு நெசவாளர்கள் மத்தியில் பட்டு நுால் தேவை அதிகரித்துள்ளது. இதனால், பட்டுக்கூடு விலை உயர்ந்துள்ளது. நேற்று, தரமான பட்டுக்கூடு ஒரு கிலோ, 681 ரூபாய்க்கும், அடுத்த தரம் 415 ரூபாய்க்கும் விற்பனையாகின. பட்டு நுால் மார்க்கெட்டில் ஒரு கிலோ, 4,891 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பட்டு அங்காடி அதிகாரிகள் கூறுகையில், 'பண்டிகை காலத்தில் பட்டு நுால் தேவை அதிகரித்து விலை உயர்வது வழக்கம். பண்டிகைகள் வருவதால், நுாலுக்கு தேவை உள்ளது. சீதோஷ்ண நிலை நன்றாக இருப்பதால், பட்டுக்கூடு உற்பத்தி அதிகரித்துள்ளது. பட்டுக்கூடுக்கு மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us