/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வால்பாறையில் காற்றுடன் கூடிய கனமழை; தமிழகத்தின் சிரபுஞ்சியில், 13 செ.மீ., தட்டியது வால்பாறையில் காற்றுடன் கூடிய கனமழை; தமிழகத்தின் சிரபுஞ்சியில், 13 செ.மீ., தட்டியது
வால்பாறையில் காற்றுடன் கூடிய கனமழை; தமிழகத்தின் சிரபுஞ்சியில், 13 செ.மீ., தட்டியது
வால்பாறையில் காற்றுடன் கூடிய கனமழை; தமிழகத்தின் சிரபுஞ்சியில், 13 செ.மீ., தட்டியது
வால்பாறையில் காற்றுடன் கூடிய கனமழை; தமிழகத்தின் சிரபுஞ்சியில், 13 செ.மீ., தட்டியது

பேரிடர் மீட்புக்குழுவினர் முகாம்
பருவமழையின் போது, இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்க தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் வால்பாறையில் முகாமிட்டுள்ளனர். இது தவிர நெடுஞ்சாலைத்துறை சார்பில், மழை பாதிப்புக்களை தவிர்க்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில், அரசுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் ஆய்வு
பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், வால்பாறை டி.எஸ்.பி., ஸ்ரீநிதி ஆகியோர் மழையினால் ஏற்பட்ட பாதிப்புக்களை நேரில் ஆய்வு செய்தனர். அதன் பின் சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, வாழைத்தோட்டம் ஆறு உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டனர்.
உடுமலை
உடுமலை பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையால், சீதோஷ்ண நிலை 'குளுகுளு'வென மாறியுள்ளது; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அதிக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதில், கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் பின் பகுதியில் உள்ள கலைவாணர் வீதியில், குடியிருப்புகளுக்கு நடுவே இருந்த பெரிய புளிய மரம் மழைக்கு சாய்ந்தது.
ஆனைமலை
ஆழியாறு அன்பு நகரில், நேற்று பலத்த காற்று வீசியதால், ரோட்டோரம் இருந்த மரம் ஒன்று, வேரோடு சாய்ந்தது. இதில், அவ்வழியே சென்ற கார் மீது மரம் விழுந்ததால், போக்குவரத்து பாதித்தது.