/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பலத்த மழை; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது பலத்த மழை; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
பலத்த மழை; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
பலத்த மழை; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
பலத்த மழை; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

பெ.நா.பாளையம்
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை, 11:00 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் கவுண்டம்பாளையத்தில் கனமழை பெய்தது. குறிப்பாக, இடையர்பாளையம், பூம்புகார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். குறிப்பாக, பூம்புகார் நகரில் மழையுடன் கலந்த சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
சூலூர்
சூலூர், காங்கயம் பாளையம், காடாம்பாடி, வெங்கிட்டாபுரம், குளத்தூர், நீலம்பூர், மயிலம் பட்டி, சின்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம், 1:30 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. இரண்டு மணி நேரம் விடாமல் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாக்கடை கால்வாய்கள் நிரம்பி ரோடுகள், வீதிகளில் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றும் வீசியது.
அன்னுார்
அன்னூர் வட்டாரத்தில், கடந்த ஒரு ஆறு நாட்களில், மூன்று நாட்கள் மழை பெய்துள்ளது. குறிப்பாக கடந்த 13ம் தேதி 42.5 மி.மீ., 15ம் தேதி 12.4 மி.மீ., 17ம் தேதி 15.2 மி.மீ., மழை பெய்தது. இதனால் அன்னூர், கெம்பநாயக்கன்பாளையம், கஞ்சப்பள்ளி, கரியாம்பாளையம், குன்னத்தூர், காட்டம்பட்டி உள்ளிட்ட குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.