மழைக்காடுகளை மேம்படுத்த வேண்டும்!
'சுற்றுச்சூழல் என்பது மரத்தை மட்டுமே சார்ந்தது அல்ல' கட்டுரையில், வாழ்க்கை அறிவியலை போதிக்கும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்களை, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இணையாக வழி நடத்த வேண்டும் என்ற கட்டுரையாளரின் கருத்து அனைவரும் ஆமோதிக்க வேண்டிய ஒன்று. மேலும், வனத்துறையில் ஓய்வுபெற்ற அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையுடன், மழைக்காடுகளை மேற்படுத்த வேண்டும்.
- டி.ஜூலியட், போத்தனுார்.
மாணவர்களுக்கு உரிய பயிற்சி அவசியம்!
'கவின் கலையை' கட்டுரையாளர் கூறியுள்ளது போன்று, கவின் கலையில் ஆற்றல் பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக பயிற்சி அளித்தால் மாணவர்களின் ஓவிய ஆற்றல் மேம்படும். இதுபோன்ற கட்டுரைகளை வெ ளியிடும், 'தினமலர்' நாளிதழை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
- எம்.தங்கராஜ், கோவை.