Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெள்ளப்பெருக்கால் பரளிக்காட்டில் பரிசல் பயணத்துக்கு தடை! ஆற்றில் குளிக்கவும் அனுமதி இல்லை

வெள்ளப்பெருக்கால் பரளிக்காட்டில் பரிசல் பயணத்துக்கு தடை! ஆற்றில் குளிக்கவும் அனுமதி இல்லை

வெள்ளப்பெருக்கால் பரளிக்காட்டில் பரிசல் பயணத்துக்கு தடை! ஆற்றில் குளிக்கவும் அனுமதி இல்லை

வெள்ளப்பெருக்கால் பரளிக்காட்டில் பரிசல் பயணத்துக்கு தடை! ஆற்றில் குளிக்கவும் அனுமதி இல்லை

ADDED : மே 26, 2025 05:14 AM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்: பில்லுார் அணை பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, காரமடை வனத்துறையின் பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மற்றும் ஆற்றில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். அதே சமயம் பூச்சமரத்துாரில் தங்குவதற்கு தடை விதிக்கப்படவில்லை.

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பரளிக்காடு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. காரமடை வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், பழங்குடியின மக்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது .

இயற்கை எழில் மிகுந்த பரளிக்காடுக்கு வர விரும்பும், சுற்றுலா பயணிகள் https://Coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் புக் செய்து கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்து வருகின்றனர்.

பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு வரும் பயணிகளுக்கு பில்லூர் அணையில் பரிசல் பயணம், பழங்குடியின மக்கள் சார்பில் வழங்கப்படும் 10க்கும் மேற்பட்ட உணவு வகைகள், அத்திக்கடவு ஆற்றில் போன்றவைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக பரளிக்காடு உள்ளது.

இதனிடையே கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் கன மழை பெய்தது. இதனால் பில்லூர் அணை பகுதிக்கு வரும் அத்திக்கடவு ஆறு மற்றும் பல்வேறு ஓடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பில்லூர் அணையில் பரிசல் பயணம் மற்றும் அத்திக்கடவு ஆற்றில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

இதுகுறித்து, காரமடை வனச்சரகர் திவ்யா கூறுகையில், காரமடை வனச்சரகம் பரளிக்காடு மற்றும் பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தளங்களில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக பரிசல் பயணம் மற்றும் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பூச்சமரத்தூரில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு தடையில்லை, என்றார்.

இந்த தற்காலிக தடையால் சூழல் சுற்றுலாவில் பணிபுரியும், பரளிக்காடு, பூச்சமரத்தூர், பில்லூர், நீராடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பரிசல் ஒட்டுநர்கள், 12க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் என பழங்குடியினர் வேலை இன்றி உள்ளனர்.---

நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு


சூலுார் வட்டாரத்தில் நேற்று முன்தினம் மாலை மழை பெய்ய துவங்கியது. அனைத்து கிராமங்களிலும் விட்டு, விட்டு மழை இரவு முழுக்க பெய்தது.

சூலுார் வட்டாரத்தில், 22.2 மி.மீ.,மழையும், சுல்தான்பேட்டையில், 26 மி.மீ., அரசூரில், 12 மி.மீ., மழை அளவு பதிவானது. நேற்று காலை முதல் தூரல் மழை பெய்தது.

மதியம் சிறிது இடைவெளிக்கு பிறகு, சின்னியம்பாளையம், நீலம்பூர், அரசூர், கருமத்தம்பட்டி, சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை சுற்றுவட்டார கிராமங்களில் மழை பெய்யத்துவங்கியது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கழிவு நீர் அடித்து செல்லப்பட்டு, மழை நீர் நொய்யல் ஆற்றில் செல்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us