Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கடலில் மீன்பிடி தடைகாலம் விற்பனைக்கு குறைந்தது வரத்து

கடலில் மீன்பிடி தடைகாலம் விற்பனைக்கு குறைந்தது வரத்து

கடலில் மீன்பிடி தடைகாலம் விற்பனைக்கு குறைந்தது வரத்து

கடலில் மீன்பிடி தடைகாலம் விற்பனைக்கு குறைந்தது வரத்து

ADDED : மே 12, 2025 11:23 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி, ; மீன்பிடி தடைகாலம் என்பதால், பொள்ளாச்சி நகருக்கான மீன்வரத்து குறைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி மீன் மார்க்கெட்டிற்கு, துாத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து, கடல் மீன்கள் தருவிக்கப்படுகின்றன. அவ்வகையில், நாளொன்றுக்கு, 1.50 டன் வரை மீன்கள் வரத்து உள்ளது.

தற்போது, கடலில் மீன்பிடி தடைகாலம் என்பதால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நாட்டு படகு மீனவர்கள் மட்டுமே கடலில் குறிப்பிட்ட துாரத்தில் மீன் பிடிக்க செல்கின்றனர்.

இதனால், பொள்ளாச்சிக்கு மீன் வரத்து குறைந்து விட்டது. வரத்து குறைவால் மீன் வகைகள், கிலோவுக்கு 120 முதல் 300 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

மீன் வியாபாரிகள் கூறுகையில், 'மீனவர்கள் தடைகாலத்தை பயன்படுத்தி விசை படகுகளை பழுது நீக்கியும், மீன் வலைகளையும் சரிசெய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மீன் வரத்து மிகவும் குறைந்து வருகிறது.

ஒரு டன் முதல், 1.5 டன் அளவில் மீன்கள் வரத்து உள்ளது. வரும் நாட்களில், தற்போதைய விலையை விட அதிக விலையில் மீன்கள் விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us