Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

 தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

 தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

 தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : டிச 01, 2025 01:18 AM


Google News
சூலுார்: சூலுார் தாலுகாவில் நேற்று அதிகாலை வரை தொடர் மழை பெய்தது.

'டிட்வா' புயல் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. கோவை மாவட்டம் முழுக்க, நேற்று அதிகாலை வரை தொடர்மழை பெய்தது.

சூலுார் தாலுகாவில் சுல்தான்பேட்டை சுற்றுவட்டார பகுதியில், 22 மி.மீ., சூலுாரில், 20 மி.மீ., அரசூரில், 12 மி.மீ., மழையளவு நேற்று காலை பதிவாகி இருந்தது. இந்த மழையால் சோளம் விதைத்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், 'தொடர் மழை மிதமாக பெய்ததால், விளை நிலங்களில் மழை நீர் நன்கு இறங்கியுள்ளது. அதனால், சோளம் பயிர்கள் நன்கு வளர்ச்சியடைய உதவியாக இருக்கும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us