/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுவர் இடிந்து விழுந்து வயதான தம்பதி காயம்; புதுப்பிக்க ஆய்வு செய்து சென்றவர்கள் 'மாயம்' சுவர் இடிந்து விழுந்து வயதான தம்பதி காயம்; புதுப்பிக்க ஆய்வு செய்து சென்றவர்கள் 'மாயம்'
சுவர் இடிந்து விழுந்து வயதான தம்பதி காயம்; புதுப்பிக்க ஆய்வு செய்து சென்றவர்கள் 'மாயம்'
சுவர் இடிந்து விழுந்து வயதான தம்பதி காயம்; புதுப்பிக்க ஆய்வு செய்து சென்றவர்கள் 'மாயம்'
சுவர் இடிந்து விழுந்து வயதான தம்பதி காயம்; புதுப்பிக்க ஆய்வு செய்து சென்றவர்கள் 'மாயம்'
ADDED : மே 26, 2025 05:35 AM

போத்தனூர்; கோவை, பிச்சனூர் பஞ்.,க்குட்பட்ட நவக்கரை எம்.ஜி.ஆர், நகரை சேர்ந்தவர் பழனி ரங்கன், 85. மனைவி ராஜம்மாள், 80. இருவரும் அரசின் முதியோர் உதவி தொகை பெற்று, கடந்த , 25 ஆண்டுளுக்கு முன் அரசால் கட்டித்தரப்பட்ட, தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, இருவரும் வீட்டினையொட்டி மேலே ஓடு போட்டு மறைக்கப்பட்டிருந்த இடத்தில் தூங்கினர். அப்போது அப்பகுதியில் மழை பெய்தது.
நள்ளிரவு, திடீரென முன்பக்க சுவர் இடிந்ததில், கான்கிரீட் மேற்கூரையும் கீழே விழுந்தது. இருவரும் சிறு காயத்துடன் தப்பினர். சத்தம் கேட்டு அருகே வசிப்போர் வெளியே வந்து பார்த்தனர். இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். க.க.சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.
அதிகாரிகள் அலட்சியம்
இப்பகுதியில் அரசால் கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் இவற்றை புதுப்பிக்க, வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து (பி.டி.ஓ..) ஊழியர்கள் வந்து கணக்கெடுத்து சென்றனர்.
பஞ்., செயலரும் வந்து விபரம் சேகரித்து சென்றார். புதுப்பிக்க தேவையான தொகையை தருவதாக கூறியுள்ளனர். ஆனால் கட்டுமான பணிக்கு, ஆட்களை தங்களால் ஏற்பாடு செய்ய இயலாது என, பயனாளிகள் கூறியுள்ளனர். இதையடுத்து பி.டி.ஓ., மற்றும் பஞ்., நிர்வாகத்தினர், கான்ட்ராக்டர் மூலம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால் மாதங்கள் கடந்தும் கட்டித்தரவில்லை. தற்போது மேலும், 10 வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.