Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்

அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்

அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்

அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்

ADDED : ஜன 07, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.

அதிகாலை கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விஷ்வக் சேனர், ஆராதனம், புண்ணிய வசனம், கலசவாகனம் ஆகிய வைபவங்கள் நடைபெற்றன.

அதை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. அரங்கநாத பெருமாள் வெள்ளி சிம்மாசனத்தில், வெண்பட்டு குடை சூழ மேளதாளம் முழங்க, கோவில் வளாகத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து உச்சகால பூஜை, சாற்றுமுறை வைபவம் நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us