Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அவுட்டுக்காய் வெடித்து நாய் பலி; ஒருவர் கைது

அவுட்டுக்காய் வெடித்து நாய் பலி; ஒருவர் கைது

அவுட்டுக்காய் வெடித்து நாய் பலி; ஒருவர் கைது

அவுட்டுக்காய் வெடித்து நாய் பலி; ஒருவர் கைது

ADDED : மார் 27, 2025 12:14 AM


Google News
தொண்டாமுத்தூர்; பச்சினாம்பதியில், காட்டுபன்றியை பிடிக்க வைத்த அவுட்டுக்காய் வெடித்து, நாய் உயிரிழந்த வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இருட்டுப்பள்ளம் அடுத்த பச்சினாம்பதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், தனது தோட்டத்தில் நாய் வளர்த்து வந்தார்.

இந்நிலையில், தனது தோட்டத்தின் அருகில் உள்ள சுப்பிரமணியின் அண்ணன் இந்திரன் தோட்டத்தில், கடந்த, 24ம் தேதி, இரவு, சுப்பிரமணி, தனது நாயை விட்டுள்ளார்.

அப்போது, தோட்டத்தில் இருந்த அவுட்டுக்காயை, நாய் கடித்தபோது, வெடித்ததில் தலை சிதறி உயிரிழந்தது. இதுகுறித்து சுப்பிரமணி, காருண்யா நகர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணையில், முகாசிமங்கலத்தை சேர்ந்த ஆண்டியப்பன்,65, என்பவர், காட்டுப்பன்றி மற்றும் முயலை வேட்டையாட, அவுட்டுக்காய் வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் ஆண்டியப்பனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

அவரது வீட்டில் இருந்த முயலுக்கு சுருக்கு வைக்கும் கம்பி, அவுட்டுக்காய்க்கு பயன்படுத்தும் பெருட்களை, பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us