Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காட்டுப்பன்றிகளை பிடிக்க தீர்மானம்

 காட்டுப்பன்றிகளை பிடிக்க தீர்மானம்

 காட்டுப்பன்றிகளை பிடிக்க தீர்மானம்

 காட்டுப்பன்றிகளை பிடிக்க தீர்மானம்

ADDED : டிச 01, 2025 01:58 AM


Google News
தொண்டாமுத்தூர்: தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், வனப்பகுதி விட்டு வெளியேறும் காட்டுப் பன்றிகள் மற்றும் காட்டு யானைகள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஆலோசனைக் கூட்டம் கரடிமடையில் நடந்தது.

மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். இதில், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவசாயிகள் எடுத்துரைத்தனர்.

காட்டுப்பன்றி பிரச்னைக்கு வனத்துறை தீர்வு காண தவறியதால், 'காட்டுப்பன்றி பிடிக்கும் படை' என்பதை உருவாக்கி, விளைநிலங்களுக்குள் புகும் காட்டுப் பன்றிகளை, விவசாயிகளே பிடிப்பது; இதனை தடுத்தால், வனத்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us