Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாம்பு கடித்து பாம்பு பிடிவீரர் உயிரிழப்பு

பாம்பு கடித்து பாம்பு பிடிவீரர் உயிரிழப்பு

பாம்பு கடித்து பாம்பு பிடிவீரர் உயிரிழப்பு

பாம்பு கடித்து பாம்பு பிடிவீரர் உயிரிழப்பு

ADDED : ஆக 02, 2024 05:06 PM


Google News
கோவை: கோவை, கணுவாய் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன்(35). பாம்பு பிடி வீரர். மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று இரவு காளப்பநாயக்கன் பாளையத்தில் பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் பாம்பு புகுந்ததாக தொலைபேசியில் தகவல் வந்தது. அங்கு உடனே சென்ற போது, மேஜை அடியில் மூன்று அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் இனத்தைச் சேர்ந்த அதிக விஷம் கொண்ட பாம்பு இருந்தது தெரிய வந்தது. அந்தப் பாம்பை வாலைப் பிடித்து தூக்க முயன்ற போது அவரை கடித்தது.

அதனை பைக்குள் பிடித்து தூக்கி செல்ல முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளார். அங்கு இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ், வனத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே முதலுதவி செய்தனர். இருந்த போதும் பாம்பு கடித்து ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திலே உயிரிழந்து உள்ளார். அங்கு வந்த வனத்துறை மற்றும் துடியலூர் காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us