குற்றவாளிகளை பிடிக்க முடியாமல்போலீசார் திணறல்
சூலுார் அடுத்த சின்னியம்பாளையம் அவிநாசி ரோட்டில், பழமையான பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த வளாகத்தில் இருந்த, விநாயகர் மற்றும் நாகர் சிலைகள், கரையாம் பாளையம் ரோட்டில் உள்ள கோவிலில் கன்னிமார் சிலைகளை கடந்த, 17 ம்தேதி இரவு மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து சூலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மடத்தின் பூட்டை உடைத்துதங்க நகைகள் திருட்டு
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பொகளூர் பகுதியில் செந்தில்குமார், 52, என்பவர் அகத்தியர் ஞானபீடம் என்ற பெயரில் மடம் ஒன்றினை நடத்தி வருகிறார். இந்த மடத்தினை ஒட்டி அவரது வீடு உள்ளது. இந்த மடத்திற்கு அடிக்கடி பக்தர்கள் வந்து செல்கின்றனர். இரவு மடத்தை பூட்டிவிட்டு, தனது வீட்டிற்கு செந்தில்குமார் தூங்கச் சென்றார்.
---மோட்டார் பைக் திருடியவர் கைது
அன்னூர், அ.மு. காலனியைச் சேர்ந்தவர் இர்பான், 33. இவர் கடந்த 14ம் தேதி இரவு அன்னூர், ஓதிமலை சாலையில், தனது மோட்டார் பைக்கை நிறுத்திவிட்டு, சிறுமுகை சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.