
மின் மோட்டார் திருடிய இருவர் கைது
தோட்டங்களில் மின்மோட்டார் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
பசு மாடுகள் திருடிய சகோதரர்கள் கைது
மாடுகளை திருடி, தூத்துக்குடியில் வளர்த்து வந்த இரு சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
சின்னத்தடாகம், இந்திரா நகர் பாலம் அருகே பள்ளத்தில் அழுகிய நிலையில் முகம் மற்றும் கை பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இது குறித்து, தடாகம் போலீஸ் எஸ்.ஐ., ரவி, சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். இதில், இறந்தவர் உடலில் காட்டுப்பன்றி அல்லது நாய் கடித்ததற்கான அடையாளம் தெரிந்தது. நீல கலர் சட்டையும், கருப்பு கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
கிராவல் மண் கடத்திய இருவருக்கு சிறை
சுல்தான்பேட்டை அடுத்த சின்ன கம்மாளப்பட்டி அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர். முறையான அனுமதி இன்றியும், ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாக லாரியில் கிராவல் மண் கடத்தி செல்வது தெரிந்தது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை சேர்ந்த நாகராஜ், 45, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்த கண்ணதாசன், 26 ஆகிய இரு டிரைவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர் அரவிந்தை தேடி வருகின்றனர்.
கொள்ளையர்களை பிடிக்க கூடுதல் தனிப்படை
கோவை மாவட்டம் காரமடை அன்னை வேளாங்கண்ணி நகரில் மரக்கடை உரிமையாளரின் வீட்டில், கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 20 பவுன் தங்க நகை திருடு போனது. அதே போல் மேட்டுப்பாளையம் மற்றும் காரமடையில் உள்ள வேறு 2 வீடுகளில் மொத்தம் ரூ.1 லட்சத்திற்கு மேல் கொள்ளை போனது.