Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை

மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை

மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை

மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை

ADDED : ஜூன் 27, 2025 09:58 PM


Google News
ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நிரந்தர உண்டியல் காணிக்கையாக, 60 லட்சத்து, 22 ஆயிரத்து, 230 ரூபாய் இருந்தது.

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில், நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதில், 22 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. சலவாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று காணிக்கையை எண்ணினர்.

நிரந்தர உண்டியலில், 60 லட்சத்து, 22 ஆயிரத்து, 230 ரூபாய் இருந்தது. வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் முத்துராமலிங்கம், தக்கார் பிரதிநிதி பொள்ளாச்சி சரக ஆய்வாளர் கோகிலவாணி, கோவில் கண்காணிப்பாளர்கள் நிர்மலாதேவி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us