Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை

மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை

மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை

மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை

ADDED : ஜூன் 11, 2025 08:07 PM


Google News
Latest Tamil News
ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக, 50 லட்சத்து, 83 ஆயிரத்து, 690 ரூபாய் இருந்தது.

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில், உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வருகின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதில், தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், சலவநாயக்கன்பட்டி பொதுமக்கள், தன்னார்வலர்கள்பங்கேற்றனர்.

தட்டு காணிக்கை உண்டியலில், 50 லட்சத்து, 83 ஆயிரத்து, 690 ரூபாய் இருந்தது. கோவை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா, ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் முத்துராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us