ADDED : மே 24, 2025 12:58 AM
ஆனைமலை : ஆனைமலையில் நடந்த கொப்பரை ஏலத்தில், கிலோவுக்கு, 196.67 ரூபாயாக விலை உயர்ந்தது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.
முதல் தர கொப்பரை, 128 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, குறைந்தபட்சமாக 180 ரூபாய் முதல், அதிகபட்சமாக 196.67 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை,193 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 135 முதல், 166 ரூபாய் வரை விலை கிடைத்தது.
மொத்தம், 321 கொப்பரை மூட்டைகளை, 63 விவசாயிகள் கொண்டு வந்தனர்; 10 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
இந்த வாரம், 21.09 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 144.45 குவிண்டால் கொப்பரை ஏலம் விடப்பட்டது. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
தேங்காய் வரத்து குறைந்துள்ள நிலையில், ஏலத்தில் கொப்பரை விலை உயர்ந்து வருவதாலும், மார்க்கெட்டில் தேங்காய் விலை உயர்ந்து வருவதாலும், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.