Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவிக்கு பாலியல் தொல்லை; கட்டடத்தொழிலாளி கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை; கட்டடத்தொழிலாளி கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை; கட்டடத்தொழிலாளி கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை; கட்டடத்தொழிலாளி கைது

ADDED : மே 31, 2025 05:01 AM


Google News
கருமத்தம்பட்டி; பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கட்டட தொழிலாளியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதி, தங்கள், 15 வயது மகளை காணவில்லை, என, கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த, மாணவியை தேடி வந்தனர்.

விசாரணையில், மதுரை மாவட்டம் பேரையூர் அடுத்த அணைக்காரப் பட்டியை சேர்ந்த கோவிந்த மூர்த்தி,18 என்பவர் கடத்தி சென்றது தெரிந்தது.

கடந்த, 10 நாட்களுக்கு முன், கட்டட வேலைக்காக கருமத்தம்பட்டி வந்த, கோவிந்த மூர்த்தி, பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார், இருவரையும் தேடி கண்டுபிடித்தனர். கோவிந்த மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us