/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர்வு; மாநில அளவில் கோவை மாவட்டம் 6வது இடம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர்வு; மாநில அளவில் கோவை மாவட்டம் 6வது இடம்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர்வு; மாநில அளவில் கோவை மாவட்டம் 6வது இடம்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர்வு; மாநில அளவில் கோவை மாவட்டம் 6வது இடம்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர்வு; மாநில அளவில் கோவை மாவட்டம் 6வது இடம்

கணிதத்தில் அதிக தோல்வி
கோவை மாவட்ட அரசு பள்ளிகளில், கணிதப்பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். மொத்தம் 315 மாணவர்கள், 124 மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. தமிழ் பாடத்தில் - 98 மாணவர்களும்;ஆங்கில பாடத்தில் - 8 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் -141 மாணவர்கள்; சமூக அறிவியல் பாடத்தில் 112 மற்றும் கணிதப் பாடத்தில் - 225 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி
கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்தம், 539 மாற்றுத்திறனாளி மாணவர்களில், 526 பேர் தேர்ச்சி பெற்று, 97.59 சதவீத தேர்ச்சி விகிதம் பதிவு செய்துள்ளனர். இதில், 9 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் என மொத்தம், 13 பேர் தேர்ச்சியடையவில்லை.
'தொடர் பயிற்சி வகுப்புகள்'
மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி கோமதி கூறுகையில், “கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. 2024-2025 கல்வியாண்டு தொடக்கம் முதலே, தலைமை ஆசிரியர்களிடம், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. தொடர் வகுப்புகள் நடத்தப்பட்டன. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில், சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி, அவர்களை மேலும் ஊக்குவித்தோம். இதனால் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது,” என்றார்.


