Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்

தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்

தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்

தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்

ADDED : ஜன 05, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், உரித்த தேங்காய் மற்றும் வாழைத்தார் ஏலம் நடந்தது.

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 'இ-நாம்' வாயிலாக மட்டை உரித்த தேங்காய் மற்றும் வாழைத்தார் ஏலம் நேற்று நடந்தது. ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார்.

ஏலத்தில், 17 மூட்டைகள் தேங்காய் வரத்து இருந்தது. அதில், கிலோவுக்கு குறைந்தபட்சம், 24 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 27 ரூபாய் விலை கிடைத்தது. இரண்டு விவசாயிகள், நான்கு வியாபாரிகள் பங்கேற்றனர். 21,814 ரூபாய் மதிப்பிலான 8.23 குவிண்டால் தேங்காய் ஏலம் விடப்பட்டது.

வாழைத்தார் ஏலத்தில் மொத்தம், 322 வாழைத்தார்கள் வந்தன. கிலோவுக்கு நேந்திரம் - 22, கதளி - 32, செவ்வாழை - 52, கற்பூர வள்ளி - 23 ரூபாய் விலை கிடைத்தது. எட்டு விவசாயிகள், நான்கு வியாபாரிகள் பங்கேற்றனர். மொத்தம், 52,702 ரூபாய் மதிப்பிலான வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us