Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செம்மொழி பூங்கா அனுமதி தள்ளிவைப்பு

 செம்மொழி பூங்கா அனுமதி தள்ளிவைப்பு

 செம்மொழி பூங்கா அனுமதி தள்ளிவைப்பு

 செம்மொழி பூங்கா அனுமதி தள்ளிவைப்பு

ADDED : டிச 01, 2025 02:46 AM


Google News
கோவை: பணிகள் முழுமையாக நிறைவடையாததால், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக செம்மொழி பூங்கா திறக்கப்படுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கோவையில் 45 ஏக்கரில் ரூ.208.50 கோடி ரூபாயில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த, 25ம் தேதி முதல்வர் துவக்கி வைத்தார். பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இன்று திறக்கப்படும் என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார். ஆனால், பணிகள் இன்னும் நிறைவடையாததால், அறிவித்தபடி இன்று பொதுமக்கள் பயன் பாட்டுக்கு திறக்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது.

பணிகள் முழுமையாக முடிந்த பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us