குட்கா விற்றவருக்கு சிறை
துடியலுார் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மினி பஸ் ஏறி ஒருவர் பலி
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார், 42. இவர் கோவை பீளமேடு, விளாங்குறிச்சி சாலையில் உள்ள ஒரு கடையின் வாசலில், நேற்று முன்தினம் இரவு படுத்து உறங்கினார். நள்ளிரவு 12:40 மணியளவில் அவ்வழியாக வந்த மினி பஸ் ஒன்று, சசிகுமார் மீது ஏறி சென்றது. இதில் அவர், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மது விற்ற இருவருக்கு சிறை
நேற்று முன்தினம், சரவணம்பட்டி போலீசார் சங்கனுார் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் காலை 8:00 மணிக்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
2 கிலோ கஞ்சா பதுக்கிய நபர் கைது
உக்கடம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில், கஞ்சா விற்பனை நடப்பதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.