/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கே.எம்.சி.எச்.,ல் சலுகை கட்டணத்தில்கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம்கே.எம்.சி.எச்.,ல் சலுகை கட்டணத்தில்கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம்
கே.எம்.சி.எச்.,ல் சலுகை கட்டணத்தில்கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம்
கே.எம்.சி.எச்.,ல் சலுகை கட்டணத்தில்கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம்
கே.எம்.சி.எச்.,ல் சலுகை கட்டணத்தில்கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம்
ADDED : பிப் 06, 2024 01:20 AM
'கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றுக்கு எந்த அறிகுறியும் இருக்காது. குறிப்பிட்ட காலத்தில் பரிசோதனை மட்டும்தான் இதை கண்டறிய உதவும்,' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
'ஹூயூமன் பாப்பிலோமா' (எச்.பி.வி.,) வைரஸ் தொற்று, 80 - 90 சதவீத பெண்களுக்கு இருக்கலாம்; 10 - 15 சதவீதம் பேருக்கு புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது.
இதற்கான அறிகுறி இருக்காது. இதை பரிசோதனை மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.
இதற்கு இரு வகையான பரிசோதனைகள் உள்ளன. முதலாவது, பேப் ஸ்மியர் பரிசோதனை. இதில், கர்ப்பப்பை வாயில் இருந்து, செல் எடுத்து பரிசோதனை செய்வது.
இரண்டாவது, அதிநவீன எச்.பி.வி., பரிசோதனை. இதில், செல்லை நேரடியாக பகுப்பாய்வு செய்து அதில் வைரஸ் உள்ளதா என கண்டறிவது. இதன் வாயிலாக, உடல் பாதிப்பு ஏற்படுவதை முன்னரே கண்டறிய முடியும்.
எச்.பி.வி., தடுப்பூசி போட்டுக் கொள்வது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என, தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு இவ்வகை பரிசோதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கே.எம்.சி.எச்.,ல் கர்ப்பப்பை வாய் பரிசோதனை, ஜன., 18 முதல் பிப்., 17 வரை நடத்தப்படுகிறது. முகாமில், சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள், தடுப்பூசியும், இலவசமாக ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் முகாமில் பங்கேற்கலாம். ஒழுங்கற்ற அல்லது அதிக மாதவிடாய் ரத்தப்போக்கு, காரணம் தெரியாத எடை இழப்பு, பசியின்மை, வெள்ளைபடுதல், அடிவயிற்றில் தொடர்ந்து வலி உள்ளிட்ட ஏதாவது அறிகுறிகள் உள்ளோர் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 87548 87568 என்ற மொபைல் போன்எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.