/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குளத்தில் களப்பணி செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்புகுளத்தில் களப்பணி செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்பு
குளத்தில் களப்பணி செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்பு
குளத்தில் களப்பணி செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்பு
குளத்தில் களப்பணி செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்பு
ADDED : ஜன 05, 2024 11:19 PM
கோவில்பாளையம்:கோவில்பாளையம் அருகே அக்ரஹார சாமக்குளத்தில் 165 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. இந்த குளத்தில் மூன்று ஆண்டுகளாக சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
நீர்வழிப் பாதையை சீரமைத்தல், மரக்கன்று நட்டு பராமரித்தல் ஆகிய பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வார களப்பணி வரும் ஞாயிறு (7ம் தேதி) காலை 7:00 மணி முதல் 10;00 மணி வரை நடைபெறுகிறது. தன்னார்வலர்கள் பங்கேற்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கோவில்பாளையத்தில் 125 ஏக்கர் பரப்பளவு உள்ள காலிங்கராயன் குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக சீரமைப்பு பணி நடந்து வருகிறது. நாளை (7ம் தேதி) காலை 7:00 மணி முதல் 10 :00 மணி வரை களப்பணி நடக்கிறது. இதில் பங்கேற்க கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
அன்னுாரில் உள்ள 119 ஏக்கர் பரப்பளவு குளத்திலும், எல்லப்பாளையம் பிரிவில் உள்ள 85 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரம் குளத்திலும், அல்லிகுளம் குளத்திலும் நாளை ஏழாம் தேதி காலை 7 :00 மணி முதல் 9:30 மணி வரை களப்பணி நடக்கிறது.