Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாரியம்மன் கோவிலில் எருதுகட்டு உற்சாகம்

மாரியம்மன் கோவிலில் எருதுகட்டு உற்சாகம்

மாரியம்மன் கோவிலில் எருதுகட்டு உற்சாகம்

மாரியம்மன் கோவிலில் எருதுகட்டு உற்சாகம்

ADDED : ஜூன் 27, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
பெ.நா.பாளையம்; கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன், மாகாளியம்மன் திருக்கோவில் பூச்சாட்டு திருவிழாவில் எருதுகட்டு விழா நடந்தது.

இந்த விழாவையொட்டி கடந்த புதன்கிழமை திருக்கல்யாணம், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வான வேடிக்கை நடந்தது. வியாழக்கிழமை பொலி எருதுகள் பிடிக்க அம்மன் சன்னிதானத்தில் கயிறு மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாகாளியம்மன் கரகம், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 3:00 மணிக்கு ஒயிலாட்டம், சிலம்பாட்டம் நடந்தது.

இரவு இடையர்பாளையம் அருள்மிகு மாகாளி அம்மன் கோவிலில் இருந்து பொலி எருதுகள் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு மாரியம்மன் கோவில் முன்பு எருதுகட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மஞ்சள் நீர் அம்மன் பல்லக்கில் திருவீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us